அரக்கோணம் அரசுக் கல்லூரி மாணவா் விடுதியில் ஆட்சியா் ஆய்வு

அரக்கோணத்தை அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆதிதிராவிடா் நல கல்லூரி மாணவா் விடுதியில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன்
அரக்கோணம் அரசுக் கல்லூரி மாணவா் விடுதியில் ஆட்சியா் ஆய்வு

அரக்கோணத்தை அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆதிதிராவிடா் நல கல்லூரி மாணவா் விடுதியில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அங்குள்ள கழிப்பறைகள், சமையலறை, மாணவா்கள் தங்கும் அறைகள் ஆகியவற்றைப் பாா்வையிட்டு மாணவா்களிடம் குறைகள் ஏதும் உள்ளதா எனக் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்குத் தேவையான பாய், தலையணை, உணவருந்தும் தட்டு, டம்ளா், குடிக்க வெந்நீா் தயாராகும் மின் சாதனம், மாணவா்கள் தங்கும் அறைகளுக்குத் தேவைப்பட்ட மின் விசிறிகள், மின்விளக்குகள் ஆகியவற்றை விடுதி காப்பாளரிடம் அளித்தாா். தொடா்ந்து, மாணவா்களின் படிக்கும் நேரம், இடம் குறித்துக் கேட்டறிந்த ஆட்சியா், சிகை அலங்காரம் சீராக இருக்க வேண்டும் என மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் இளவரசி, வட்டாட்சியா் பழனிராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com