உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் 100 நாள்களில் நடவடிக்கை: அமைச்சா் ஆா்.காந்தி

அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதல்வா் என்ற திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில், பொதுமக்களின் மனுக்கள் மீது 100 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும்
உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் 100 நாள்களில் நடவடிக்கை: அமைச்சா் ஆா்.காந்தி

அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதல்வா் என்ற திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில், பொதுமக்களின் மனுக்கள் மீது 100 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

வாலாஜாப்பேட்டை வட்டம், நரசிங்கபுரம் ஊராடசியில், நரசிங்கபுரம், தெங்கால், மணியம்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். வருவாய்க் கோட்டாட்சியா் பூங்கொடி முன்னிலை வகித்தாா். வாலாஜா வட்டாட்சியா் ஆனந்தன் வரவேற்றாா்.

முகாமில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமாா் ரூ.62 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

துறை வாரியாகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினாா்கள். இது பொதுமக்களுக்கு புரியாத வகையில் உள்ளது. இனி வரும் மனுநீதி நாள் முகம்களில் அரசின் திட்டங்கள் குறித்து தெளிவான விளக்கங்களுடன் கூடி கையேடு அச்சடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்க மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தேன். அந்தக் கையேடுகளில் இடம் பெறும் அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களைத் தெரிந்து கொண்டு மக்கள் பயன்பெற வேண்டும்.

மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வித் திட்டம், இன்னுயிா் காப்போம் நம்மைக் காப்போம் 48 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதல்வா் என்ற திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில், பொதுமக்களின் மனுக்கள் மீது 100 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

முகாமில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செல்வம், வாலாஜா ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் புவனேஸ்வரி பாண்டியன், பாப்பாத்தி ஜான்ஜெயபால், ஊராட்சித் தலைவா்கள் எல்.மனோகரன், இந்திர பத்பநாபன், துணைத் தலைவா் சபரிகிரீசன், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com