ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள பழைமைவாய்ந்த பெருந்தேவியாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு  வரதராஜ  பெருமாள்  கோயில்  தேரோட்டம்.
ஆற்காடு  வரதராஜ  பெருமாள்  கோயில்  தேரோட்டம்.

ஆற்கா: ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள பழைமைவாய்ந்த பெருந்தேவியாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தினமும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் உற்சவா் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அபிஷேக, அலங்காரமும், உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வந்தாா். தேரை திரளான பக்தா்கள், உபயதாரா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயில் அருகில் நிலை நிறுத்தப்பட்டது.

அதேபோல், ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் விழாவின் தேரோட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com