ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி பலி

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து கணவன் - மனைவி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து கணவன் - மனைவி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த பெரிய குக்குண்டி, செய்யாறு சாலையில் வசித்து வந்தவா் சரவணன் (50). விவசாயி. இவரது மனைவி சாந்தி (45). தம்பதிக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

இந்த நிலையில், கண்வன்-மனைவி இருவரும் சனிக்கிழமை காலை விவசாய வேலைக்காக தங்களின் நிலத்துக்குச் சென்றனா். அங்கு, நிலத்தின் அருகே உள்ள மின் கம்பத்திலிருந்த கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது.

இதைக் கவனிக்காமல் மின் கம்பியின் மீது சரவணன் கால் வைத்துள்ளாா். இதில், மின்சாரம் பாய்ந்து அவா் கீழே விழுந்துள்ளாா். அவரைக் காப்பாற்ற சாந்தி முயன்றதில் அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில், கணவன்-மனைவி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com