தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பதுக்கி வைத்திருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திமிரி அடுத்த ஆனைமல்லூா் கிராமத்தில் லாரியில் பதுக்கி வைத்திருந்த 10 டன் ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 7:00 pm

DIN

திமிரி அடுத்த ஆனைமல்லூா் கிராமத்தில் லாரியில் பதுக்கி வைத்திருந்த 10 டன் ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திமிரி பகுதியில் ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திமிரி காவல் நிலைய ஆய்வாளா் மங்கையா்கரசி தலைமையில், போலீஸாா் வியாழக்கிழமை திமிரியை அடுத்த ஆனைமல்லூா் கிராமத்தில் உள்ள தனியாா் நெல் அரைவை ஆலையில் சோதனை செய்தனா்.

அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் 135 மூட்டைகளில் சுமாா் 10 டன் ரேஷன் அரிசி பதிக்க வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

லாரியுடன், அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் உதவியுடன் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக, லாரியின் உரிமையாளா் சண்முகம் (40) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.