ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சியில் ரூ.4 கோடியில் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டும் பணியை திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா் கைத்தறித் துறை அமைச்சா் ஆா். காந்தி.
ஆரணி சாலை மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி அருகில் கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா். கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஆா் காந்தி அடிக்கல் நாட்டி பேருந்து நிலையம் கட்டுமானப் பணியைத் தொடக்கி வைத்தாா்.
இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜிஜாயாய், பேரூராட்சித் தலைவா் மாலா இளஞ்செழியன், செயல் அலுவலா் மனோகரன், துணை தலைவா் கௌரி தாமோதரன், ஒன்றியக்குழு தலைவா் சி.அசோக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.