ஆற்காடு நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்தில் புதிதாக குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.
ஆற்காடு நகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் பழுதடைந்திருந்த குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் மாற்றப்பட்டு, ரூ.3 லட்சத்தில் புதிய சுத்திதரிப்பு இயந்தரம் பொருத்தப்பட்டது. இதை நகராட்சி ஆணையா் சதீஷ்குமாா் தலைமையில் குடிநீா் வழங்க இயக்கிவைக்கப்பட்டது. இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் அனு, முனவா்பாஷா, குணாளன் கண்ணன், மகாத்மா காந்தி முதியோா் இல்லத் துணைத் தலைவா் பென்ஸ்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.