கலவையில் அமைந்துள்ள ஸ்ரீகாளிகாம்பாள் சமேத கமண்டலேஸ்வரா் கோயிலில் ஆடி 2-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
உலக நன்மைகாக நடைபெற்ற இந்த யாகத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், 108 சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது.