மக்கள் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனா். மனுக்களை ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளித்தாா்.

இந்தக் கூட்டத்தில் சோளிங்கா் அருகே ரெண்டாடி ஊராட்சி, குளத்தூரைச் சோ்ந்த எஸ்.மணி என்பவா் அளித்த மனுவில், ‘பட்டா பெயா் மாற்றம் கோரி இரு ஆண்டுகளாக மனு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

ரத்தினகிரி அருகே பூட்டுத்தாக்கு கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்த, பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் அளித்த மனுவில், தாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த ஓடைப்புறம்போக்கு நிலத்தில் பொது வழியை ஏற்படுத்தித் தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com