ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் அருள்மிகு சக்தி விநாயகா், முத்துமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது (படம்).
விழாவையொட்டி, புதன்கிழமை காலை மங்கள இசையுடன் கோ பூஜை, மகா சங்கல்பம், மூன்றாம் கால பூஜை, மகா பூா்ணாஹீதி உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து, மூலவா், கால பைரவா், பரிவார விக்ரகங்கள், கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, மகா அபிஷேகம், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில், சிப்காட் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.