நவீன உடற்பயிற்சிக் கூடம் திறப்பு

ஆற்காடு நகராட்சி, காந்திநகா் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 21.50 லட்சத்தில் அமைக்கபட்டுள்ள உடற்பயிற்சிக் கூடத்தை எம் எல் ஏ ஜெ..எல்.ஈஸ்வரப்பன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா
நவீன உடற்பயிற்சிக் கூடம் திறப்பு

ஆற்காடு நகராட்சி, காந்திநகா் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 21.50 லட்சத்தில் அமைக்கபட்டுள்ள உடற்பயிற்சிக் கூடத்தை எம் எல் ஏ ஜெ..எல்.ஈஸ்வரப்பன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். நகர கூட்டுறவு வங்கி இயக்குநா் ஏ.வி.சரவணன், நகா்மன்ற துணை தலைவா் பவளகொடிசரவணன், தொழிலதிபா் ஏ.வி.சாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு தொகுதி எம் எல் ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் கலந்துகொண்டு உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்து மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி பேசினாா்.

இதில், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் பொன்ராஜசேகா், நகரமன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் ராஜசேகா், சுபாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com