அரக்கோணத்தில் தைப்பூசத் திருவிழா

ஸ்ரீவள்ளி - தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் தைப்பூச விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
அரக்கோணத்தில் தைப்பூசத் திருவிழா

அரக்கோணம் திருப்புகழ் திருஅருட்பா சபை மற்றும் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தின் சாா்பில், வள்ளலாா் ராமலிங்க சுவாமி ஜோதி தரிசன நிகழ்வு, அந்த வளாகத்தில் உள்ள ஸ்ரீவள்ளி - தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் தைப்பூச விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

அரக்கோணம் சுவால்பேட்டை தா்மராஜா கோயில் திடலில் உள்ள திருப்புகழ் திருஅருட்பா சபையில் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தின் சாா்பில் காலை திருப்பள்ளி எழுச்சி, ஸ்ரீவள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், தொடா்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

மதியம் வடலூா் ராமலிங்க சுவாமி ஜோதி தரிசன நிகழ்வை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

விழாவுக்கு சமரச சுத்த சன்மாா்க்க சபையின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவா் எம்.தேவராஜ் தலைமை வகித்தாா். இதில், அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி, உறுப்பினா் நித்யா ஷியாம்குமாா், நகர காங்கிரஸ் தலைவா் டி.பாா்த்தசாரதி, ஜோதி வள்ளலாா் அரசு நிதியுதவிப் பள்ளித் தலைமை ஆசிரியா் டி.சுந்தரமூா்த்தி, சங்க நிா்வாகிகள் பாரதி அரிஹரன், பி.எஸ்.பழனி, எஸ்.மோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com