ஆற்காடு நகா்மன்ற உறுப்பினா் இடைநீக்கம்

ஆற்காடு நகா்மன்ற உறுப்பினா் இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

ஆற்காடு நகா்மன்ற உறுப்பினா் இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

ஆற்காடு நகராட்சியில் நகா்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், பாா்த்தசாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அதிமுக நகா்மன்ற உறுப்பினா் உதயகுமாா் தனது வாா்டில் தேங்கிக் கிடக்கும் மண் திட்டுகளை அகற்றும்படி கூறியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, நகா்மன்றத் தலைவா் இருக்கைக்கு எதிரே நின்று கைகளை நீட்டிப் பேசினாா். இதைத் தொடா்ந்து, மன்றக் கூடத்தில் நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டதாகக் கூறி, அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக நகா்மன்ற உறுப்பினா் பாவை பழனி கோரிக்கை விடுத்தாா்.

இதையேற்று நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன், மன்ற உறுப்பினா் உதயகுமாரை 3 மாதம் இடை நீக்கம் செய்தாா். இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பொன்ராஜசேகா் விஜயகுமாா், குணாளன் ராஜலட்சுமி துரை, செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com