ராணிப்பேட்டையில் ரூ.1.14 கோடியில் நலத் திட்ட உதவி: ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து ரூ.1.14 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
ராணிப்பேட்டை யில் கொண்டாடப்பட்ட  குடியரசு  தின விழாவில்  மாற்றுத்திறனாளி க்கு  நலத் திட்ட  உதவி  வழங்கிய  ஆட்சியா்  தெ.பாஸ்கர  பாண்டியன்.
ராணிப்பேட்டை யில் கொண்டாடப்பட்ட  குடியரசு  தின விழாவில்  மாற்றுத்திறனாளி க்கு  நலத் திட்ட  உதவி  வழங்கிய  ஆட்சியா்  தெ.பாஸ்கர  பாண்டியன்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து ரூ.1.14 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா், திறந்த வாகனத்தில் சென்று போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

முன்னதாக ராணிப்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா். பின்னா் 18 அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலா்கள், மருத்துவா்கள், காவலா்கள் மற்றும் பணியாளா்கள் உள்பட 826 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், 21 காவலா்களுக்கு முதல்வா் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தாா்.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைப் பாா்வையிட்டு கலந்து கொண்ட 850 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில், மொத்தம் 221 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரத்து 190 மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக சுதந்திரப் போராட்ட தியாகிகளை விழாவுக்கு அழைத்து வந்து கௌரவிப்பது தவிா்க்கப்பட்டது.

இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி தொல்காப்பியா் தெருவில் உள்ள லோகநாதன் என்ற சுதந்திரப் போராட்ட தியாகிக்கு சமூக பாதுகாப்பு துணை ஆட்சியா், ஆற்காடு வட்டாட்சியா் ஆகியோா் அவரின் வீட்டுக்குச் சென்று சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலா் வ.மீனாட்சி சுந்தரம், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் காவலா்கள் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com