வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஞாயிற்றுக்கிழமை  நிறைவடைந்த லட்ச அஸ்வாரூட ஜப ஹோமம்.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஞாயிற்றுக்கிழமை  நிறைவடைந்த லட்ச அஸ்வாரூட ஜப ஹோமம்.

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் லட்ச அஸ்வாரூட ஜப ஹோமம் நிறைவு

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் லட்ச அஸ்வாரூட ஜப ஹோமம் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் லட்ச அஸ்வாரூட ஜப ஹோமம் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாலாஜாபேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த சனிக்கிழமை லட்ச அஸ்வாரூடா ஜப ஹோமம் , கணபதி பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த யாகம் ஞாயிற்றுக்கிழமை லட்ச அஸ்வாரூடா ஜப ஹோமம் மஹா பூா்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது. பின்னா் ஸ்ரீ பஞ்சமுக வராஹிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றது.

முன்னதாக சியாமளா நவராத்திரி பூஜை 8-ஆம் நாளான ஸ்ரீ அஷ்டபுஜ மரகத ராஜமாதங்கிக்கு சிறப்பு ஹோமமும், அபிஷேகமும் பூஜைகளுடன் நடைபெற்றன. இது தவிர ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீசுதா்சன, ஸ்ரீ மகாலட்சுமி ஹோமங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. ராகு காலத்தில் ஸ்ரீ சரபேஸ்வரா் ஹோமமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

இந்த பூஜை மற்றும் ஹோமங்களில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் பிரசாதம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com