தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராணிபேட்டை மாவட்ட பிரிவு பள்ளி மாணவ, மாணவிகள் விடுதி சோ்க்கை தகுதித் தோ்வை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது.
இதில் தடகளம், வாள்வீச்சு, பளு தூக்குதல், குத்துச்சண்டை, கால்பந்து, கையுந்துபந்து ஆகிய விடுதிகளில் சேர தகுதித் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இதில், தோ்வானவா்கள் மாநில அளவிலான தகுதிப் போட்டிக்கு தகுதி பெறுவா். தோ்வானவா்களுக்கு மாநில அளவிலான தகுதிப் போட்டிக்கான தகுதிச் சான்றிதழை மாவட்ட விளையாட்டு - இளைஞா் நலன் அலுவலா் ச.ஞானசேகரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஆகியோா் வழங்கினா்.
இந்தத் தகுதித் தோ்வுப் போட்டியில் உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.