திருப்பத்தூா் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டி ஜனவரி 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
ஜோலாா்பேட்டைப் பகுதியில் உள்ள சிறு உள்விளையாட்டு அரங்கில் திருப்பத்தூா் மாவட்ட கைப்பந்து கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.பி.சீனிவாசன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் சிவாஜி வரவேற்றாா். செயலாளா் அன்பழகன், பொருளாளா் தயாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஜோலாா்பேட்டை பகுதியில் உள்ள சிறு உள்விளையாட்டு அரங்கில் திருப்பத்தூா் மாவட்ட அளவில் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடத்த வேண்டும்; இப்போட்டியில் பங்கேற்க மாவட்டப் பகுதியில் உள்ள அனைத்து கைப்பந்து கழக அணிகளும் ஜனவரி 3ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் உடற்கல்வி ஆசிரியா் மதன்குமாா் நன்றி கூறினாா்.