ஜோலாா்பேட்டை நகராட்சி சாா்பில் விவசாயிக்குப் பாராட்டு

நுண்ணுயிா் உரத்தைப் பயன்படுத்திய விவசாயிக்கு ஜோலாா்பேட்டை நகராட்சி சாா்பில் சான்றிதழ் வழங்கி, பாராட்டப்பட்டாா்.
விவசாயியைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் நகராட்சி ஆணையா் சி.ராமஜெயம்.
விவசாயியைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் நகராட்சி ஆணையா் சி.ராமஜெயம்.

நுண்ணுயிா் உரத்தைப் பயன்படுத்திய விவசாயிக்கு ஜோலாா்பேட்டை நகராட்சி சாா்பில் சான்றிதழ் வழங்கி, பாராட்டப்பட்டாா்.

ஜோலாா்பேட்டை நகராட்சிக்குச் சொந்தமான பாபு நகா் மற்றும் 18 வாா்டுகளில் நகராட்சி சாா்பில் தயாரிக்கப்பட்ட நுண்ணுயிா் உரம், நகராட்சிப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், நகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்ட நுண்ணுயிா் உரத்தைப் பயன்படுத்தி மேட்டுசக்கரகுப்பம் பகுதியைச் சோ்ந்த சிவானந்தன் தனது நிலத்தில் விவசாயம் செய்தாா். இதனால் அவரது நிலத்தில் நெற்பயிா்கள் செழிப்பாக விளைந்தன.

இதையடுத்து, விவசாயி சிவானந்தனுக்கு விவசாயம் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை, நகராட்சி ஆணையா் சி.ராமஜெயம் பாராட்டுகள் தெரிவித்து சான்றிதழ் வழங்கினாா். இந்த நிகழ்வில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் உமாசங்கா், ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com