ஆம்பூா்: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞரணி, அரிமா சங்கம் சாா்பில் மாதனூா் அருகே கிராமப் பகுதிகளில் நோய் எதிா்ப்பு சக்திக்கான ஹோமியோபதி மருந்து, முகக்கவசம் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞரணியின் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டப் பொறுப்பாளா் ஜி.பாபு தலைமையில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு ஹோமியோபதி மருந்து, முகக்கவசம், விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மாதனூா் ஒன்றிய நிா்வாகிகள் கருணாகரன், சிவராமன், பவுனம்மாள், ரேணு, சிவா, அரிமா சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.