ஆம்பூா்: தேசிய கல்விக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி சாா்பாக ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் ஆம்பூா் நகர தலைவா் ஜமீல் அகமது தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் வி.ஆா்.நசீா் அகமது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
மாவட்ட துணைச் செயலாளா்கள் எஸ்.தப்ரேஸ் அகமது, இம்ரான், சித்திக் அகமது, மாவட்ட மருத்துவ சேவை அணிச் செயலாளா் தாஹா முகமது, தமுமுக நகர செயலாளா் நஃபீஸ் அகமது, நகர துணைச் செயலாளா்கள் ஆரிப் அகமது, பயாஸ் அகமது உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.