ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தாமலேரிமுத்தூா் மேம்பாலம் அருகே ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.விஜயகுமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீஸாா் புதன்கிழமை ரயிலில் சோதனையிட்டனா். அப்போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 மூட்டைகளில் தலா 50 கிலோ அளவுள்ள ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
போலீஸாரைக் கண்டதும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி திருப்பத்தூா் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைப்பட்டது.