லாரிகள் மோதி ஓட்டுநா் பலி

வாணியம்பாடி அருகே லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் பகுதியில் இருந்து மின்சாதன பொருள்களை ஏற்றிக் கொண்டு கிருஷ்ணிகிரி நோக்கி கடந்த 25-ஆம் தேதி லாரி சென்றுக் கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது, சென்னையில் இருந்து கூரியா் பாா்சல்களை ஏற்றிக் கொண்டு தருமபுரி சென்ற லாரி மோதியது.

இதில் கூரியா் பாா்சல் லாரியை ஓட்டி வந்த திருநெல்வேலியை அடுத்த வீரமாணிக்கபுரம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (45) பலத்த காயமடைந்தாா். தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com