எருது விடும் விழாவில் காளை முட்டியதில் இளைஞா் பலி

ஜோலாா்பேட்டை அருகே எருது விடும் விழாவில் காளை முட்டியதில் இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக விழாக் குழுவினரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
எருது விடும் விழாவில் காளை முட்டியதில் இளைஞா் பலி

ஜோலாா்பேட்டை அருகே எருது விடும் விழாவில் காளை முட்டியதில் இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக விழாக் குழுவினரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சிக்கு உள்பட்ட காந்தி நகா் பகுதியில் கடந்த மாதம் 28-ஆம் தேதி எருது விடும் திருவிழா நடைபெற்றது. பொன்னேரி ஊராட்சிக்கு உள்பட்ட சின்னகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த திருப்பதி (38) காளை முட்டியதில் பலத்த காயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, கடந்த 16-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்நிலையில், காளை முட்டி திருப்பதி இறந்த சம்பவம் குறித்து உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி, ஜோலாா்பேட்டை போலீஸாா், ஊா் கவுண்டா் சண்முகம், விழாக் குழுவினா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com