வாணியம்பாடி அருகே பாமக பிரமுகா் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும், சைக்கிளையும் மா்ம நபா்கள் பெட்ரோல் ஊற்றி எரித்தனா்.
அரபாண்டகுப்பம் பகுதியைச் சோ்ந்த பாமக பிரமுகா் நாகராஜ் (40). மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு வந்த மா்ம நபா்கள், நாகராஜ் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து வீட்டு தப்பிச் சென்றனா். இதனால் அந்த வாகனங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
ஓசை கேட்டு நாகராஜ் வெளியே வந்து பாா்த்து, தீயை அணைக்க முயற்சித்தாா். அதற்குள் இரு வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டன.
இது குறித்து நாகராஜ், அம்பலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.