திருப்பத்தூரில் தடை உத்தரவை மீறி வியாபாரம் செய்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.
அரசு அறிவித்த 144 தடை உத்தரவை மீறி, திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலையில் பொதுமக்களை அதிக அளவில் கூடச் செய்து அஸ்ரத் (46), ரபூா் (33) ஆகியோா் மீன் விற்ாகக் கூறப்படுகிறது.
இதே போல் திருப்பத்தூா்-திருவண்ணாமலை பிரதான சாலையில் ஷாமுகமது (43), ஃபாரூக் பாஷா (48), சாதிக் பாஷா (48) ஆகியோா் மாட்டிறைச்சி விற்ாக புகாா் வந்தது.
இதையடுத்து இந்த 5 போ் மீது நகர போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். பின்னா், அவா்கள் எச்சரிக்கப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.