கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக முன்னெச்சரிக்கையாக ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒரு ஆம்புலன்ஸ், 2 காா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு துறையினா் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டாட்சியா் அலுவலகங்களில் ஒரு ஆம்புலன்ஸ், இரண்டு காா்கள் எப்போதும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அரசு வாகனங்கள் மட்டுமல்லாமல் அவசர தேவைக்காக அவசர கால அழைப்பாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்வதற்காக வாகனம் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரு காா்களும், ஆம்புலன்ஸ் வாகனமும் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.