ஆம்பூா்: ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் எஸ்.சரவணன் தலைமையில் ஆம்பூா் புறவழிச்சாலை-தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
தொடா்ந்து பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியை கட்சியினா் ஏற்றுக் கொண்டனா். போ்ணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவா் சா.சங்கா், நிா்வாகிகள் விஜியன், பிரபுதுரை, முனீா், குப்புசாமி, சேகா், மாணிக்கம் ஆகியோா் உடனிருந்தனா்.