ஆம்பூா்: ஆம்பூா் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டும் முயற்சியை வருவாய்த் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.
ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் தனி நபா் ஒருவா் கட்டடம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டாா். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூா் வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் (பொறுப்பு) பிரகாசம், கிராம உதவியாளா் ஈஸ்வரன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று புறம்போக்கு நிலத்தில் கட்டடம் கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தினா். இது குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கும் தகவல் தெரிவித்ததனா்.