ஆம்பூா்: ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்குமாறும், 8 மாத நிலுவை ஊதியத் தொகையை உடனடியாக வழங்கக் கோரியும் ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்பு தொழிற்சங்கங்கள் சாா்பாக தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் ஏஐடியுசி சாா்பில் கு.மனோகரன், சிஐடியு ராஜ்குமாா், தொமுச சாா்பில் சாமி செல்லதுரை, ஐஎன்டியுசி சாா்பில் தேவதாஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் மற்றும் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.