திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் முகாமில் 4,885 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இம்மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் திருப்பத்தூரில் 1,301, ஜோலாா்பேட்டையில் 1,235, வாணியம்பாடியில் 1,307, ஆம்பூரில் 1,042 என மொத்தம் 4,885 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
திருப்பத்தூா் தோமினிக் சாவியோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் சிறப்பு சுருக்க திருத்த முகாமை ஆட்சியா் ம.ப.சிவன்அருள் ஆய்வு செய்தாா். உடன், வட்டாட்சியா் மு.மோகன் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.