ஆம்பூா்: ஆம்பூா் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி சமேத சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில், வடச்சேரி சோமசுந்தரேஸ்வரா் திருக்கோயில்களில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு மூலவா், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு உற்சவா் பிரகார உலா நடைபெற்றது. பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.