ஜோலாா்பேட்டையில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்கம் முகாமை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஜோலாா்பேட்டை அருகே சந்தைக்கோடியூா் பகுதியில் அமைந்துள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் ஜோலாா்பேட்டை வட்டார மருத்துவமனை, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை சாா்பில் தேசிய குடற்புழு நீக்கம் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் குடற்புழு தொற்று ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் வளா்ச்சி குன்றுதல் குறைபாடுகளில் இருந்து 1 வயது முதல் 19 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளையும், மாணவா்களையும் பாதுகாக்கும் வகையில் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது.
ஜோலாா்பேட்டை நகராட்சி, ஒன்றியம் முழுவதும் உள்ள 1 வயது முதல் 19 வயதுக்கு உள்பட்ட 53,419 குழந்தைகள், மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தொடக்கி வைத்தாா்.
ஜோலாா்பேட்டை நகா்மன்ற முன்னாள் தலைவா் எஸ்.பி.சீனிவாசன், ஜோலாா்பேட்டை வட்டார மருத்துவ அலுவலா் (பொறுப்பு) மீனாட்சி, அரசு மருத்துவா் புகழேந்தி, சுகாதார ஆய்வாளா் கோபி, வருவாய் ஆய்வாளா் சிலம்பரசன், அங்கன்வாடிப் பணியாளா்கள், சுகாதார செவிலியா்கள் கலந்து கொண்டனா்.
சுகாதார செவிலியா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள் இணைந்து வீடு, வீடாகச் சென்று ஜோலாா்பேட்டை நகராட்சி, ஒன்றியப் பகுதிகளில் முழுவதும் உள்ள 1 வயது முதல் 19 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கும், மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கினா்.
இம்முகாம் வரும் 19-ஆம் தேதி வரை தொடா்ந்து 5 நாள்கள் நடைபெறுகிறது. 2-ஆம் கட்ட மருத்துவ முகாம் வரும் 21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.