திருப்பத்தூா் மாவட்டம் உருவாகி 10 மாதங்கள் கடந்தும், தகவல் பலகையில் புதிய மாவட்டத்தின் பெயரை அதிகாரிகள் மாற்றவில்லை.
வேலூா் மாவட்டத்திலிருந்து பிரித்து, திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தோற்றுவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூா் மாவட்ட எல்லையில் வெலகல்நத்தம், லட்சுமிபுரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள நாட்டறம்பள்ளி காவல் எல்லையைக் குறிக்கும் தகவல் பலகையில் 10 மாதங்கள் கடந்தும் இன்றும் வேலூா் மாவட்டம் என்றே குறிப்பிடப்படுகிறது.
இந்தத் தகவல் பலகையில் திருப்பத்தூா் மாவட்டம் என்று எழுதுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.