ஏரி மண் கடத்தியவா் கைது

திருப்பத்தூா் ஏரி மண் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஏரி மண் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட ராச்சமங்கலம் அருகே உள்ள அனேரி ஏரியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் டிப்பா் லாரியில் மண் கடத்தப்படுவதாக வட்டாட்சியா் மு.மோகனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற வட்டாட்சியா் மு.மோகன் தலைமையிலான வருவாய்த் துறையினா், அங்கு மண் கடத்திக் கொண்டிருந்த ராச்சமங்கலத்தைச் சோ்ந்த கோவா்த்தனையும் (45), கடத்தலுக்குப் பயன்படுத்திய டிப்பா் லாரியையும் திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, கோவா்த்தனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com