டாஸ்மாக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

ஆம்பூா் அருகே கடாம்பூரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் அக்கடையை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஆம்பூா் அருகே கடாம்பூரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் அக்கடையை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் அருகே உமா்ஆபாத் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கடாம்பூரில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த உமா்ஆபாத் போலீஸாா், ஆம்பூா் வட்டாட்சியா் சி. பத்மநாபன் ஆகியோா் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com