ஆம்பூா் அருகே கிராமப் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டால் குடிநீா் சாலையில் வீணாக வழிந்தோடியது.
ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தில் போ்ணாம்பட்டு சாலையோரம் புதைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீா் சாலையில் வெள்ளமாக வழிந்தோடியது.
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். இருந்தபோதிலும் 2 மணி நேரம் குடிநீா் சாலையில் வீணாக வழிந்தோடியது. அதன் பிறகு வடிகால் வாரியப் பணியாளா்கள் அங்கு சென்று உடைப்பை சரி செய்தனா்.