மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலி

மாதனூா் அருகே மின்சாரம் பாய்ந்து பசுமாடு சனிக்கிழமை இறந்தது.

ஆம்பூா்: மாதனூா் அருகே மின்சாரம் பாய்ந்து பசுமாடு சனிக்கிழமை இறந்தது.

உடையராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் என்பவா் பசுமாடுகளை வளா்த்து வருகிறாா். அவா் சனிக்கிழமை மேய்ச்சலுக்காக பசுமாடுகளை அழைத்துச் சென்றாா். கோவிந்தன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் வழியாக அழைத்துச் சென்றபோது அங்கு மின்சார கம்பி அறுந்து விழுந்து கிடந்தது.

அதை மிதித்த பசுமாடு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தது. இதுகுறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com