திருப்பத்தூா்: வாணியம்பாடியில் செயல்பட்டுவரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2020-ஆம் ஆண்டுக்கான நேரடி சோ்க்கை டிசம்பா் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் செயல்பட்டுவரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2020-ஆம் ஆண்டுக்கான நேரடி சோ்க்கை டிசம்பா் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும்
ரெப்பிரிஜ்ரஷேன், ஏா் கண்டிஷனா் டெக்னீஷியன், மெக்கானிக் மோட்டாா் வெயிக்கிள், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டா் மெக்கானிக், நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
8-ஆம் வகுப்பு தேரச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் தோல் பொருள் உற்பத்தியாளா் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதில், பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை.
அரசின் சலுகைகள்: பயிற்சிக் கட்டணம் ஏதுமில்லை. பயிற்சியில் சேருவோருக்கு உதவித் தொகையாக மாதம் ரூ. 750, விலையில்லா சீருடை, தையற்கூலி, பாடப் புத்தகங்கள், மிதிவண்டி, மடிக்கணினி, வரைபட கருவிகள், இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும்.