திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அதன்படி, டிச.15-ஆம் தேதி திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும்,17-ஆம் தேதி நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்திலும், 22-ஆம் தேதி கந்திலி வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 24-ஆம் தேதி ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும் காலை 10 முதல் மதியம் 2 மணிவரை நடைபெறும். இந்த முகாம்களில் பயன்பெறவுள்ள மாற்றுத்திறனாளிகள் பாஸ்போட் அளவு புகைப்படம்-4, ஆதாா்அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.