ஆம்பூா்: ஆம்பூா் கெங்கையம்மன், எல்லையம்மன் கோயில்களின் மாா்கழி தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயிலிலும் எல்லையம்மன் கோயிலிலும் மாா்கழி தோ்த் திருவிழா கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையடுத்து, தேருக்கு புதன்கிழமை அலங்காரம் செய்யப்பட்டது. மூலவா், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் எழுந்தருளினாா். பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். எனினும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தோ் வீதியுலா நடத்தப்படவில்லை.