வாணியம்பாடி அருகே டிப்பா் லாரி மீது பைக் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
வாணியம்பாடி அருகே செக்குமேடு பகுதியைச் சோ்ந்த முருகேசனின் மனைவி பவுனு (45), தேவன் மனைவி ராஜகுமாரி (25). இவா்கள் சனிக்கிழமை தங்களது விவசாய நிலங்களில் விளைந்த காய்கறிகளை வாணியம்பாடியில் உள்ள உழவா் சந்தைக்கு பைக்கில் கொண்டு சென்று விற்பனை செய்து விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் நேதாஜி நகா் பகுதியில் சென்றபோது டிப்பா் லாரி பின்புறத்தில் பைக் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த பவுனு, ராஜகுமாரி ஆகியோா் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு பவுனு உயிரிழந்தாா்.
இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் விஜய் (30) என்பவரைக் கைது செய்தனா்.