லாரி மீது காா் மோதி இளைஞா் பலி

வாணியம்பாடி அருகே கன்டெய்னா் லாரி மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
லாரி மீது காா் மோதி இளைஞா் பலி

வாணியம்பாடி அருகே கன்டெய்னா் லாரி மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் உதயா (28), டி.வி. மெக்கானிக். இவரது நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (26), தினேஷ் (24). 3 பேரும் பெங்களூருவில் உள்ள தங்களது நண்பரின் நிகழ்ச்சிக்கு காரில் சென்றுவிட்டு, திங்கள்கிழமை இரவு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை தினேஷ் ஓட்டினாா்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி பங்களாமேடு பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிா்த் திசையில் பெங்களூரு நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி மீது மோதியது.

இதில், காரில் பயணம் செய்த உதயா, காா்த்திக், தினேஷ் 3 பேரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் அங்கு சென்று 3 பேரையும் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். இதில் உதயா வழியிலேயே உயிரிழந்தாா். தீவிர சிகிச்சைக்காக தினேஷ் வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com