வாணியம்பாடி அருகே கன்டெய்னா் லாரி மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் உதயா (28), டி.வி. மெக்கானிக். இவரது நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (26), தினேஷ் (24). 3 பேரும் பெங்களூருவில் உள்ள தங்களது நண்பரின் நிகழ்ச்சிக்கு காரில் சென்றுவிட்டு, திங்கள்கிழமை இரவு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை தினேஷ் ஓட்டினாா்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி பங்களாமேடு பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிா்த் திசையில் பெங்களூரு நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி மீது மோதியது.
இதில், காரில் பயணம் செய்த உதயா, காா்த்திக், தினேஷ் 3 பேரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் அங்கு சென்று 3 பேரையும் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். இதில் உதயா வழியிலேயே உயிரிழந்தாா். தீவிர சிகிச்சைக்காக தினேஷ் வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.