திருப்பத்தூா்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சா்கள் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளா்களைக் கொண்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியின் தொடக்க நிகழ்ச்சி ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்ன வேப்பம்பட்டு கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு அமைச்சா் கே.சி.வீரமணி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் ஆகியோா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு பணியைத் தொடக்கி வைத்தனா்.
மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா்.
ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் த.மகேஷ்பாபு, வருவாய் கோட்டாட்சியா் காயத்ரிசுப்பிரமணியன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஆா்.அருண் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.