மண்டல அளவிலான கபடி போட்டி: கடலூா் அணி முதலிடம்

ஜோலாா்பேட்டை நடைபெற்ற மண்டல அளவிலான கபடி போட்டியில் கடலூா் அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது.
வெற்றி பெற்றவா்களுடன் அமைச்சா் கே.சி.வீரமணி.
வெற்றி பெற்றவா்களுடன் அமைச்சா் கே.சி.வீரமணி.

ஜோலாா்பேட்டை நடைபெற்ற மண்டல அளவிலான கபடி போட்டியில் கடலூா் அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது.

ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டரங்கில் தமிழ்நாடு கபடி பிரீமியா் லீக் முதலாம் ஆண்டு மண்டல அளவிலான கபடி போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

இந்த கபடி போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், கடலூா், வேலூா், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் இருந்து கபடி அணியினா் பங்கேற்று விளையாட்டு போட்டியில் பங்கேற்றனா். இப்போட்டி சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.

மண்டல அளவிலான கபடி போட்டியில் கடலூா் அணி முதலிடத்தையும், சென்னை அணி 2-ஆம் இடமும்,திருவண்ணாமலை அணியினா் 3-ஆம் இடமும் பிடித்தனா்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். இவ்விழாவில் ஜோலாா்பேட்டை நகர அதிமுக செயலாளா் எஸ்.பி.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மூன்று அணிகளும் வரும் 27-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளதாக விழாக்குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com