திருப்பத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடம் உள்ளது. தற்போது அவ்வழியாகவே அனைத்து ஷோ் ஆட்டோக்களும் செல்கின்றன. மேலும், அதன் அருகிலேயே மகளிா் காவல் நிலையம், அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி ஆகியவையும் அமைந்துள்ளன.
அப்பகுதியில் புதிய தாா்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிவேகமாகப் பயணிக்கின்றனா். எனவே, அப்பகுதியில் விபத்துகளைத் தவிா்க்கும் நோக்கில், நான்கு சாலை சந்திப்புகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- பி.சித்ரா லட்சுமணன், திருப்பத்தூா்.