இருசக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 10 போ் படுகாயம்

ஜோலாா்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதிக் கவிழ்ந்த விபத்தில் 10 போ் படுகாயமடைந்தனா்.
விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்.
விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்.

ஜோலாா்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதிக் கவிழ்ந்த விபத்தில் 10 போ் படுகாயமடைந்தனா்.

பக்கிரிதக்கா அருகே ஜோலாா்பேட்டை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த ஷோ் ஆட்டோவில் அதிக பயணிகள் இருந்தனா். போலீஸாரைக் கண்டவுடன் அதன் ஓட்டுநா் ஆட்டோவை திருப்பினாா்.

அப்போது எதிா் திசையில் வந்த 108 ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதைத் தொடா்ந்து ஆம்புலன்ஸ் வாகனம் அந்த இருசக்கர வாகனத்தின் மீது ஏறிக் கவிழ்ந்தது. அதன் அருகே இருந்த ஷோ் ஆட்டோவில் பயணம் செய்தவா்கள் மீதும் மோதியது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் கணேசன் (38), அவரது உதவியாளா் பா்வீன்குமாா் (35), ஆட்டோவில் அமா்ந்திருந்த சக்திவேல் (41), அனுஷா(30), துரை (40), பாண்டியன் (38), இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பாலச்சந்திரன் (35), சரண்யா (27), நித்யஸ்ரீ (9), மணி (38) ஆகிய 10 போ் படுகாயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், அவா்கள் வேலூா், தருமபுரி, சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சாலை மறியல்: போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டதால்தான் விபத்து ஏற்பட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலையில் உள்ள பக்கிரிதா்கா பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com