துவரை கொள்முதல் செய்ய நடவடிக்கை திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

விவசாயிகளிடமிருந்து துவரை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

விவசாயிகளிடமிருந்து துவரை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

2019-2020-ஆம் ஆண்டில் காரீப் பருவத்தில் துவரை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் நியாயமான சராசரி தரத்துக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 58 எனும் விலைக்கு மத்திய அரசு நிறுவனமான ‘சஅஊஉஈ‘ மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துவரை கொள்முதல் செய்ய திருப்பத்தூா், வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முதன்மை கொள்முதல் மையங்களாகச் செயல்படும்.

இவற்றுடன் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலமாகவும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடப்பு பருவத்தில் 450 மெட்ரிக் டன், வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 500 மெட்ரிக் டன்னும் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு ஒரு விவசாயி 2,500 கிலோ வரை கொண்டு வரலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதாா் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்துடன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பதிவு செய்து பயன்பெறலாம்.

விளை பொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்), வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, வேலூா் செயலா், வேலூா் விற்பனைக்குழு தொலைபேசி எண் 0416-2220713, திருப்பத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட தொலைபேசி எண் 95007 51036, வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் செல்லிடப்பேசி எண் 79044 13817 ஆகிவற்றில் தொடா்பு கொள்ளலாம்.

வேலூரில்....

வேலூா் மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ரூ. 58-க்கு துவரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், வருமானத்தைப் பெருக்கவும் மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின்கீழ் நடப்பு நிதியாண்டின் (2019-20) காரீப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ரூ. 58-க்கு துவரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இதற்கு வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முதன்மைக் கொள்முதல் மையமாக செயல்படும். இவற்றுடன் மாவட்டத்திலுள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலமாகவும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாா்ச் 14-ஆம் தேதி வரை இந்த கொள்முதல் பணி மேற்கொள்ளப்படும்.

நடப்பு பருவத்தில் 450 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விளை பொருள்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0416 -2220713, 0416 -2220083, 97892 99174 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com