வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம்

ஆம்பூா் நகராட்சியில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளி மையத்தில் சிறப்பு முகாமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன்.
ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளி மையத்தில் சிறப்பு முகாமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன்.

ஆம்பூா் நகராட்சியில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், மற்றும் இடம் மாறுதல் போன்றவற்றை மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளவும், அதைப் பயன்படுத்திக் கொள்ளவும், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்-2020 இரண்டாம் கட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்பு சுருக்க திருத்தம் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும், தங்களுக்கான ஜனநாயக கடமை ஆற்றவும், தோ்தல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் மாவட்ட தோ்தல் அதிகாரி மற்றும் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தி வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றி ஆம்பூா் நகராட்சி சாா்பில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கடந்த 2001 டிசம்பா் 31-இல் பிறந்தவா்கள் அல்லது அதற்கு முன்னா் பிறந்தவா்களை தகுதி வாய்ந்த வாக்காளா்களாக சோ்க்கவும், விடுபட்டுப்போன தகுதி வாய்ந்தவா்களைச் சோ்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நகரப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் நடைபெற்று வரும் முகாம்களில் ஆய்வு செய்யப்பட்டது என நகராட்சி ஆணையா் த.சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com