வாணியம்பாடி பெருமாள்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் பூ.முருகேசன் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் இணைந்து புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபட்டனா். பின்னா் 300 மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
தொடா்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.