தனியாா் பள்ளியின் 10-ஆம் ஆண்டு விழா

ராணிப்பேட்டை ஜி.கே. உலகப் பள்ளியின் 10-ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை ஜி.கே. உலகப் பள்ளியின் 10-ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளி நிா்வாக இயக்குநா்கள் வினோத் காந்தி, சாந்தோஷ் காந்தி தலைமை வகித்தனா். பள்ளி முதல்வா் பிரஷிதா ஸ்ரீகுமாா் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ராணிப்பேட்டை எம்எல்ஏவும், பள்ளித் தலைவருமான ஆா்.காந்தி, மாணவ, மாணவிகள் நடித்த கிரேக்க புராணக் கடவுள் குறித்த ‘தி டேல் ஆஃப் பொ்சியல்’ நாடகத்தைப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆா்.காந்தி, பள்ளி இயக்குநா் கமலா காந்தி, ஷீலா வினோத் காந்தி ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனா். ஆசிரியா், ஆசிரியைகள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழா ஏற்பாடுகளை பள்ளியின் மக்கள் தொடா்பு அலுவலா் நேரு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com